Home Blog Page 2699

அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP): போரினால் மரணித்தவர்களைக் கணக்கிடல்

சிறீலங்காவில் 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணாமற் போனார்கள் என்ற அறுதியான ஒரு இலக்கத்தைத் தர அரசுக்கு இணக்கமில்லை, தமிழர் தரப்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.

இத் துயரமான நிலைமைக்கு தென்னிலங்கை அரசுகளும் அரசியல்வாதிகளும் காரணிகளாக இருந்ததனாலோ என்னவோ பாதிக்கப்பட்டவர்களின் தவிப்புக்களைத் தீர்க்குமளவுக்கு உண்மையயும் நீதியையும் நிலைநாட்டவேண்டுமென்ற எந்த அவசரமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அபயம் அனைத்துலக நாடுகளும் ஐ.நா. போன்ற அவற்றின் சாதனங்களும் தான்.

இருப்பினும் நடைபெற்ற அநியாயத்துக்கு நாம் நியாயமான தீர்ப்பொன்றை எதிர்பார்க்கும்போது நடைபெற்ற அநியாயம் இது தான் என்று ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் தரவுகளைக் கொடுப்பதும் அவசியமாகிறது. துர்ப்பாக்கியமாக, இதுவரையில் அரச தரப்பிலிருந்தோ, அல்லது தமிழர் தரப்பிலிருந்தோ தரவுகள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வருடா வருடம் ஐ.நா. முன்றலில் நாம் என்னதான் அழுது புரண்டாலும் நம்பகத்தன்மையுடன் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை.

இன் நிலையில் அனைத்துலக உண்மை, நீதிக்கான செயற்திட்டம் (International Truth and Justice Project – ITJP) என்ற அமைப்பும், மனித உரிமைகள் தரவாய்வுக் குழுமம் (Human Rights Data Analysis Group – HRDAG) என்ற இரு அனைத்துலக அமைப்புகள் சிறீலங்காவின் 2009 இறுதிப்போரின் முன்னரும் பின்னரும் மரணித்த, காணாமற் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.. அமெரிக்காவில் இயங்கி வரும் ‘இலங்கைத் தமிழ்ச் சங்கம்’ மற்றும் கனடிய தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இம் முயற்சிக்கு ஆதரவளிப்பதுடன் இது குறித்த விருப்பப்பாடுள்ள அனைத்து அமைபுக்கள், தனியார் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, ITJP யின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜஸ்மின் சூக்கா ஏற்கெனவே ஐ.நா.வில் இது குறித்துப் போராடி வருபவர். HRDAG உலக அரங்கில் மதிக்கப்படும் புள்ளிவிவரம் மற்றும் தரவுகளை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அறிக்கைகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாகும். குவாட்டமாலா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இவ்வமைப்பு தகவல்களைச் சேகரித்து ஆய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறது.. தமிழர் தரப்போ அல்லது எந்த பாதிக்கப்பட்ட தரப்பினரோ தாமாகச் சேகரித்துத் தரும் தகவல்களுக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. எனவே இப்படி சர்வதேச அரங்கில் அனுபவமும் நம்பகத்தன்மையும் கொண்ட நிறுவனங்களின் மூலம் நம் பணிகளை முன்னெடுப்பது நல்லதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

இத் தருணத்தில் இவ்விரு அமைப்புக்களும் எதிர்பார்ப்பது போர்க்காலத்தில் மரணிததவர்கள் பற்றிய சில தரவுகளையே. பல தமிழ் அமைப்புக்களும், தனிப்பட்டவர்களும், ஊடகங்களும் இறந்துபோனவர்கள், காணாமற் போனவர்கள் பற்றி ஏற்கெனவே பல தகவல்களைத் திரட்டி வைத்திருப்பார்கள் அல்லது தகவல்களை வழங்கக்கூடிய தொடர்புகளைக் கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் தகவல்களை இவ்வமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் கையளிக்கலாம். தகவல்களைத் திரட்டக்கூடியவர்கள், தொடர்புகளை வைத்திருப்பவர்கள் தாமாக இத் தகவல்களைப் பெற்றுப் பதியக்கூடியதான படிவங்களை இவ்வமைப்புகள் ஏற்கெனவே தயாரித்துள்ளன. அவற்றைப் பெறும் வழி வகைகளை இங்கு தருகிறோம்.

இந்த மாதம் (ஆகஸ்ட்) 24, 25ம் திகதிகளில் கனடிய தமிழ்க் காங்கிரஸ் நடாத்தும் 5 வது ‘தெரு விழாவில்’ மேற்கூறிய அமைப்புக்கள் ஒரு சாவடியை அமைப்பதாக எண்ணியுள்ளன. தகவல்களைத் திரட்டுவதற்குத் தேவையான பத்திரங்களும் வழிகாட்டல் உதவிகளும் இச் சாவடியில் வழங்கப்படும்..

சிறீலங்கா அரசுகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருப்பதை விட நாம் எமது எதிர்காலத்தை எமது கைகளிலே எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதற்காக நாம் வேறு அணுகுமுறைகளைக் கையாளவேண்டும். சரியான தரவுகளும், ஆவணங்களும் அவற்றை உரிய முறையில் கையாளவல்ல நிறுவனங்களும் இன்றய காலத்தின் தேவையாக நாம் பார்க்கிறோம்.

அதையும் விடவும், மரணித்த இம்மக்களைக் காலம் பூராவும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு நினைவுக் கோர்வையை உருவாக்குவதற்கும் இத் தரவுகள் பயன்படுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களை நினைப்பது அவர்களின் மரணங்களுக்கு அர்த்தத்தைக் கொடுக்கலாம். அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் எனவே இது எங்கள் கடமை.

தகவல்களை வழங்கும் எவரின் அடையாளங்களோ, பெயர்களோ, முகவரிகளோ பிரத்தியேகமாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தொடர்புகளுக்கு: Canadian Tamil Congress – 416-240-0078.

நேரடியாக: தமிழர் தெருவிழா – August 24 &25 Markham Road, Scarborough

விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தியதாகவும் அது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு கூறியதாகவும் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெ.பிரதீபன்  தெரிவித்தார்.

பூமியை நெருங்கி வரும் ஆபத்து

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அதே போன்று  பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த விண்கல் 4 தொடக்கம் 9கிலோமீற்றர் வரையான விட்டத்தைக் கொண்டது.

தற்போது சூரியனைச் சுற்றி வரும் இவ்விண்கல் 2027ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ஆம் திகதி பூமிக்கு மிகவும் அண்மையாக வரும் எனவும், இதன் போது ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமரா

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக 19.08 அன்று இரவு ட்ரோன் கமரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8. மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்தக் கமரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ட்ரோன் கமரா தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் இவ்வாறான ட்ரோன் கமராக்களை கண்டால் சுட்டு வீழ்த்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன கப்பல் 90 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பி வந்தது

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது.

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) என்ற கப்பல்.

சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகவே இந்தக் கப்பல் ஹவானாவை சென்றடைய முடியும்.

ஆனால் புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை. இந்நிலையில் குறித்த கப்பல் தற்போது திரும்பி வந்துள்ளது.

ஆனால் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தது.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் புளோரிடாவிலிருந்து புவேர்ட்டோ, ர்க்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle).

மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான புளோரிடாவை கடந்து தான் எஸ்.எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால் அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ்.கொடபக்சி காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.

எஸ்.எஸ்.கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, இந்தக் கப்பலில் 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ. ஜே. மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்தவிதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.

அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போது தான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பலான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது.

திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல அண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகின.

கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்.எஸ்.கொடபக்சி கப்டனின் லொக் புக் (Log Book) எனப்படும் குறிப்பு எழுதும் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால் அதில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்.எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

கியூபா அரசாங்கம் எஸ்.எஸ். கொடபக்சி கப்பல் காணாமல் போனது ஏன்? மற்றும் திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளன.

 

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தாவைச் சந்திக்கும் துணை இராணுவக் குழுக்கள்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா 19.08 அன்று சந்தித்தார்.

முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் என கருதப்படும் விடயங்களை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் கோத்தபயாவிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் திருப்தி ஏற்பட்டதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கோத்தபயா ஆர்வம் காட்டி விருப்பம் தெரிவித்ததாகவும் இதை தான் வரவேற்பதாகவும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எந்தவொரு ஆட்சி வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழமான இலட்சியமாகும்.

எனவே எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப் போகின்ற கோத்தபயா ராஜபக்ஸவை எதுவித அரசியல் பலமுமின்றி அந்த அரசியல் பலத்தை மக்கள் இனிவரும் காலத்தில் வழங்குவர் என்ற நம்பிக்கையோடு எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் கோத்தபயா ராஜபக்ஸவுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம்.

இலங்கைத் தீவின் சகல இன மக்களும் ஏற்றுக் கொண்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி செல்வதால், எமது தேசத்தின் அபிவிருத்தி மேலும் சிறந்து விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (19.08) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபயா மட்டும் ஈடுபடவில்லை. போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் ஏதோ கோத்தபயா மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டேயாகும்.

எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் வரதராஜப்பெருமாளும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் தமிழர்

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெறுகின்றார்.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது.

பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றவர் ஆவர்.

1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள் ஆவர்.

லெஸ்ரர் பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்வையிட…
https://le.ac.uk/n…/2019/august/20-new-vice-chancellor-named

இதேவேளை சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் குறி்ப்பிடத்தக்கது.

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

– 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, Dundas Square சதுக்கத்தில் துண்டுப்பிரசுர விழப்பு பரப்புரை செய்யப்படவுள்ளன.

– பின்னர் மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை, Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5 இடத்தில் கருத்தாடல் நிகழ்வு ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

– மறுநாள் 31-08-2019 சனிகிழமையன்று Markham – Steels சந்தியில் விழிப்பு பரப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயகத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. கனடா உட்பட அமெரிக்கா பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளது.

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியை வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் முன்னெடுக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் விழிப்பு நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுத்து நீதியினை வென்றடைய அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :http://youarenotforgotten.org/

தொடர்புகளுக்கு: +1 (647) 783-3466

+1 (416) 766-9544

+1(647) 262-5587

+1416-830-4305

சவேந்திர சில்வாவின் நியமனம் நீதி விசாரணைகளை பாதிக்கும் – கனடா

சிறீலங்கா அரசு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனடா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனேடியத் தூதரகம் இன்று (20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சில்வாவின் நியமனம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவேண்டிய நீதி விசாரணைகளையும் பாதிக்கும். எனவே கனடா அரசு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.

சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போரின் போது அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை சிறீலங்கா மீறியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் செய்தது தமக்கு மிகப்பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் சiயின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சிறீலங்கா வழங்கிய உறுதிமொழி குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. போர்க்குற்ற நீதி விசாரணைகளை மேற்கொள்வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு சிறீலங்கா உடன்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலட் தெரிவித்த கருத்தையே ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது. அதாவது சில்வா மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளதாக பசெலட் தெரிவித்திருந்தார்.

இந்த நியமனமானது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறான செய்திகளை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.