பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன கப்பல் 90 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பி வந்தது

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது.

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) என்ற கப்பல்.

சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகவே இந்தக் கப்பல் ஹவானாவை சென்றடைய முடியும்.

ஆனால் புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை. இந்நிலையில் குறித்த கப்பல் தற்போது திரும்பி வந்துள்ளது.

ஆனால் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தது.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் புளோரிடாவிலிருந்து புவேர்ட்டோ, ர்க்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle).

மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான புளோரிடாவை கடந்து தான் எஸ்.எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால் அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ்.கொடபக்சி காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.

எஸ்.எஸ்.கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, இந்தக் கப்பலில் 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ. ஜே. மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்தவிதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.

அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போது தான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பலான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது.

திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல அண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகின.

கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்.எஸ்.கொடபக்சி கப்டனின் லொக் புக் (Log Book) எனப்படும் குறிப்பு எழுதும் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால் அதில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்.எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

கியூபா அரசாங்கம் எஸ்.எஸ். கொடபக்சி கப்பல் காணாமல் போனது ஏன்? மற்றும் திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளன.