சவேந்திர சில்வாவின் நியமனம் நீதி விசாரணைகளை பாதிக்கும் – கனடா

சிறீலங்கா அரசு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனடா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனேடியத் தூதரகம் இன்று (20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சில்வாவின் நியமனம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவேண்டிய நீதி விசாரணைகளையும் பாதிக்கும். எனவே கனடா அரசு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.

சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போரின் போது அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.