விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தியதாகவும் அது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு கூறியதாகவும் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெ.பிரதீபன்  தெரிவித்தார்.