Home Blog Page 2386

வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வவுனியா வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

“ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம்” என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (சீட்) நிறுவனத்தின், வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது.
இதன் இறுதி நாள் நிகழ்வானது வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய பொது விளையாட்டு மைதானத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விருத்தினர்களின் பற்குபற்றலுடன் நிறைவுற்றிருந்தது.

இவ் விளையாட்டு போட்டியானது வெறுமனே விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் விசேட தேவைக்குட்பட்டவர்களை எவ்வாறு சாதாரண கல்வி முறைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது.
மேலும் விசேட அம்சமாக அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் விசேடதேவைக்குட்பட்ட மாணவர்களும் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றிணைந்து ஈடுபட்டதுடன் உட்படுத்தல் சாத்தியம் என்ற எண்ணக்கருவை அனைவருக்கும் நிரூப்பித்திருந்தமை முன்னுதாரணமான செயற்பாடுகளாக காணப்பட்டது.

இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் அரச பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நந்தகுமார், வவுனியா தெற்கு வலய விசேடகல்வி ஆசிரிய ஆலோசகர் உதயராஜன், உளநலபிரிவு விசேட வைத்தியர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி கேனடி உட்பட பல அரச மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

DSC 0913 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
????????????????????????????????????

IMG 20200309 154004 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலை 7 மணியளவில் விமான பயணிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பேரூந்துகளில் 265 பேர் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாட்டுக்கு முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

DSC 0528 6 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0533 4 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0536 3 1 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0541 1 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்: கோத்தாவிடம் சஜித் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் ஜனாதிபதியைச் சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் விவாதிக்க முடியும்என்று சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோதப் படுகொலைகளை இலங்கை நிறைவேற்றியது; சாடுகிறது அமெரிக்கா

இலங்கை அரசால் சட்டவிரோதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரச முகவர்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

இவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

இலங்கையில் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் நியாயப்படுத்த முடியாத விதத்தில் கைது செய்யப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது போன்றன காணப்படுகின்றன. அதேவேளை, பொலிஸார் தொடர்ந்தும் பொதுமக்களைத் துன்புறுத்துகின்றனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நடை முறைப்படுத்தவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது. அரச தரப்பினரும் நீதித்துறையினரும் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்று சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. மனித உரிமைகள் அமைப்பினர் வழங்கியுள்ள பேட்டிகளின்போது இலங்கையில் சித்திரவதைகளும் அளவுக்கதிகமான பலப்பிரயோகமும் காணப்படுவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி கண்மூடித்தன மாகக் கைதுசெய்து தடுத்துவைத்தலும் தொடர்கின்றமையை அறியமுடிந்துள்ளது” என்றுள்ளது.

கட்சியை நாசமாக்கிவிட்டீர்கள்; கடுஞ்சொற்களால் மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி அதனை முற்றாக ஒழிக்க முயன்ற பெருமை உங்களையே சாரும்.கட்சியில் இருந்து என்னை நீக்க நீங்கள் யார்? அரசியலில் நீங்கள் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டீர்கள்

இவ்வாறு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

13 பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் சிறிசேனவைக் கடும் வார்த்தைப்பிரயோகங்களால் விளாசித் தள்ளியுள்ள சந்திரிகா , ஐ.தே.க. வழங்கிய பதவியை வைத்து பின்னர் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த ஒருவர் என்று மைத்திரியைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியமை தவறென்றும் அது செல்லுபடியாகாதென்றும் குறிப்பிட்டுள்ள சந்திரிகா , சுதந்திரக்கட்சியை எந்தக் கொம்பனாலும் இல்லாமலாக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன்,ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 29 ஆம் திகதிவரை பயணிகள் இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு சென்று திரும்பிய ஒருவரும் இத்தாலியில் இருந்து வந்த இருவருக்குமே இந்த தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு தனது விமான சேவையை இரத்துச் செய்தது எயார் இந்தியா 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே பல நாடுகளுக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி, இலங்கை உட்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை இரத்துச் செய்துள்ளதாக எயார் இந்தியா அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகளின் விசா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் பல நாடுகளுக்கு விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எயார் இந்தியா விமான நிறுவனம் நேற்று ரோம் மற்றும் மிலனுக்கு சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்று இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விமான சேவையை இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

வவுனியாவில் பண்;டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் சுயேற்சைக்குழுவில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பதாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்டுள்ள மாவீரன் பண்டார வன்னியன் சிலைக்கு கௌரவமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 2 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

01 1 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

01 3 பண்டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து வேட்பு மனுதாக்கல்

வவுனியாவில் கொரனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே முன்னாள் எம்.பி செல்வம்

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இவ் உயிர்கொல்லி வைரஸில் இருந்து மக்களை காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமே.

எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதனை பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை அமையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

கடந்த வருடம் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை உடனடியாக வவுனியாவிற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. இதற்கு வவுனியா மக்கள் எதிர்ப்பை காட்டியபோதிலும் அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

இதேபோன்றதான மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளை பார்க்கும் போது எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசு செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.

இத்தாலி தென்கொரியா ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது எதற்காக வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத்தோன்றுகின்றது என தெரிவித்தார்