வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வவுனியா வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

“ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம்” என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (சீட்) நிறுவனத்தின், வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது.
இதன் இறுதி நாள் நிகழ்வானது வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய பொது விளையாட்டு மைதானத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விருத்தினர்களின் பற்குபற்றலுடன் நிறைவுற்றிருந்தது.

இவ் விளையாட்டு போட்டியானது வெறுமனே விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் விசேட தேவைக்குட்பட்டவர்களை எவ்வாறு சாதாரண கல்வி முறைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது.
மேலும் விசேட அம்சமாக அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் விசேடதேவைக்குட்பட்ட மாணவர்களும் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றிணைந்து ஈடுபட்டதுடன் உட்படுத்தல் சாத்தியம் என்ற எண்ணக்கருவை அனைவருக்கும் நிரூப்பித்திருந்தமை முன்னுதாரணமான செயற்பாடுகளாக காணப்பட்டது.

இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் அரச பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நந்தகுமார், வவுனியா தெற்கு வலய விசேடகல்வி ஆசிரிய ஆலோசகர் உதயராஜன், உளநலபிரிவு விசேட வைத்தியர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி கேனடி உட்பட பல அரச மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

DSC 0913 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
????????????????????????????????????

IMG 20200309 154004 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி