நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்: கோத்தாவிடம் சஜித் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் ஜனாதிபதியைச் சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் விவாதிக்க முடியும்என்று சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.