Home Blog Page 13

அமைச்சர் விஜித்த ஹேரத், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,

நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் முதல் பொது மக்கள் வரை அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடினோம்.

இந்தோ – பசிபிக் பங்காளர்களாக நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் இன்று…

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (17) நடத்தப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர் நீத்தார்.

இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது:

“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியும், இரவு விருந்தும் நேற்றுமுன்தினம் (15) திங்கட்கிழமை இரவு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் தனுஜா ஜா ஆகியோரின் அழைப்பின் பேரில் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இந்த நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் மதிப்புகளை பாதுகாக்க அயராது உழைத்த மக்களின் ஒற்றுமையை நினைவூட்டுகின்றோம்.

இலங்கையர்களாகிய நாம் இந்தியாவின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. இலங்கையும், இந்தியாவும் அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன.

கலாச்சார நிகழ்ச்சிகள், கல்வி நடவடிக்கைகள் உட்பட பல துறைகள் மூலம் இந்த நட்பை பாதுகாப்பதில் இலங்கை – இந்திய சமூகம் மதிப்புமிக்க பங்கைக் கொண்டுள்ளது.

நாட்டில் சவாலான காலங்களில், மனிதாபிமான உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளது.

நவீன யுகத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் பரவியுள்ளது. இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு சுகாதாரப் பராமரிப்பு. கொழும்பில் அப்பலோ வைத்தியசாலைகளை நிறுவுதல் மற்றும் நாட்டில் நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் சேவையைத் தொடங்குதல் உள்ளிட்ட நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் மற்றும் மூலோபாய உறவுகள், மேலும் உதவித்தொகைகள், பயிற்சித் திட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கலை ஒத்துழைப்புகள், அத்துடன் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் இலங்கையின் பிராந்திய ஈடுபாடு போன்ற விடயங்கள் மூலம், இலங்கையும், இந்தியாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் தோளோடு தோள் நிற்கின்றன.

பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்யும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா தனது 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இலங்கை கடந்த காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய துறைகளில் நாம் தொடர்ந்து உறவுகளை உருவாக்க வேண்டும்., முக்கியமாக, பல நூற்றாண்டுகளாக நம்மை வழிநடத்தி வரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் நட்பின் மதிப்புகளை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், 79 ஆவது சுதந்திர தினத்தன்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்புப் பயணத்தில் இந்தியக் குடியரசுக்கு இலங்கை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கை – இந்திய சங்கம் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி பங்காளியாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இன மற்றும் கலாச்சார உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேலானவை” என்றார்.

செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என அறிவிப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி  உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி  “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என்று அறிவித்துள்ளது.

“அன்புடன் நம்மைப் பாதுகாத்துக் கொள்க – உலகை வெல்ல” என்ற தொனிப்பொருளின் கீழ் “சிறுவர்கள் தின தேசிய வாரம்” பல தேசிய திட்டங்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் உரிமைகளுக்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினர் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை (Peace Corps) வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மூன்று மாத காலப் பயிற்சிக்குப் பிறகு சேவை செய்ய உள்ளனர்.

இந்த அமைதிப் படையினர், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்காக, மூன்று மாதங்களுக்கு முன்-சேவை பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள்.

பயிற்சிக்குப் பின்னர், அவர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சமூகங்களுடன் இணைந்து, ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் சமூக வாழ்க்கையின் அங்கமாகச் செயல்படுவார்கள்.

அமெரிக்காவின் மதிப்புகளான சேவை, அமைதி மற்றும் நட்பு ஆகியவற்றை இந்தத் தன்னார்வலர்கள், நட்புறவை வளர்ப்பதன் மூலமும், உண்மையான அயல் வீட்டாராக வாழ்வதன் மூலமும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அமைதிப் படையினரின் வருகை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மக்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பு  சிங்கள மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான ஆரம்பப்புள்ளி: – பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மாடுகள் மேயும் மேய்ச்சல் தரை போராட் டம் கடந்த பலவருடங்களாக இடம் பெற்றும் எந்த நீதியும் இன்றி மேய்ச்சல்தரை பிரச்சினை இனி இல்லை என்றது போன்ற மாயை, தோற்றப்பாடு உள்ளது.
ஆனால் இதுவரை கடந்த கால அரசுகளால் ஏமாற்றப்பட்டு கடந்தகால 2024, ஜனாதிபதி தேர்தல்காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தியும் வாக்குறுதிகள் மட்டுமே பண்ணை யாளர்களுக்கு வழங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்ட வரலாறே உள்ளது. மாடுகளுக்கான  மேய்ச்சல்தரை பிரச்சினை எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் அது தீர்க்கப்படவில்லை.
இதனால் மீண்டும் மட்டக்களப்பு பண் ணையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். கவன ஈர்ப்பு போராட்டத்தை தொடங்குவதை விட வேறுவழியில்லை எனவும் அரசியல் வாதிகளால் தாம் நம்பி ஏமாற்றப்பட்டுள்ளோம் எனவும் மன வருத்ததுடன் பல பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுவருகிறார்கள்.
மட்டக்களப்பு பொலன்னறுவை எல் லைப் பிரதேசமான மயிலத்தமடு பெரிய மாதவனை பிரதேசத்தில்
மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேய்ச்சல்தரையில் இருந்து ஓடவைப்பதற்காக முழுமூச்சான திட்டம் என்பது கடந்த கால ஆட்சியாளர்களால் சிங்களவர்களைக்கொண்டு  மேற்கொள்ளப்பட்டு  அங்கு அவர்களை குடியேற்்றி எதிர் வரும் காலங்களில் மட்டக்களப்பில் இருந்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் ஆரம்ப புள்ளியாகவே மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பை நோக்க முடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் பிரதிநிதிகள் இன்றி தப்பிக்கிடக்கும் ஒரே மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே திருகோணமலை,அம்பாறை ஆகிய மாவட்டங்க ளில் இப்போது சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் களின் பிரதிநித்துவம் உள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப் படும் 1948ல்  பெப்ரவரி 04 தொடக்கம் 1960 மார்ச் 20 பொதுத் தேர்தல் வரை 12 வருடங்களாக வடகிழக்கில் எந்த ஒரு மூலையிலும் இருந்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக வில்லை. 1960 ஜூலை 20 ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில்தான் அம்பாறைத்தொகுதியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக விஜயசிங்க விஜயபாகு என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார். அன்றுதான் வடகிழக்கில் இருந்து முதல் முதலாக சிங்களவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான வரலாறாகும்.
1961 ஏப்ரல் 10 ல் மட்டக்களப்பு மாவட் டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவானது. அதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்டமாகவே அம்பாறை கிராமங்கள் இணைந்திருந்தன. 1961 தொடக்கம் 1978  வரையும் அம் பாறை மாவட்டம் என அழைக்கப்பட்டது ஆனால் 1978- செப்டம்பர் 07 ல் புதிய அரசில் யாப்பு உருவாக்கப்பட்டு 22 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது அம்பாறை என்ற பெயர் காணாமல் போய் “திகாமடுல்ல” என்ற சிங்களப் பெயர் அம்பாறை மாவட்டத்துக்கு சூட்டப்பட்டது இதுவும் ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்தன செய்த சதியாகும் அப்போது எந்த தமிழ், முஷ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறை என்பதை திகாமடுல்ல என மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன் என்பது தெரியவில்லை.
அம்பாறையில் உள்ள நான்கு தொகுதிக ளான அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை இதில் ஒரு பெயரை மாவட்டத்துக்கு  பெயராக வைப்பதற்கு அப்போது தமிழ், முஷ்லிம் அரசியல் வாதிகள் தவறிவிட்டனர் என்பதே உண்மை.
1977 யூலை 21 ல் நடைபெற்ற தேர்தலில் தான் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் தொகுதி உருவாக்கப்பட்டு எச்,அடா.லீலாரெட்டண என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார் அதற்கு முன்னம் திருகோணமலையில் எந்த சிங்கள பிரதிநித்துவமும் இல்லை. 1989 பெப்ரவரி 15  தேர்தலானது முதலா வது விகிதாசாரத்தேர்தல் இதில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநித்துவம் உறுதியானது ஆனால் 1994 ஆகஸ்ட்16 ல் நடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 06 ஆசனங்களில் 04 சிங்களவரும் 02 இஷ்லாமியரும் பாராளுமன்ற உறுப்பினரானார்கள்.
இறுதியாக 2024 நவம்பர் 14 ல் நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 07 உறுப் பினர்களில் 03 சிங்களவர் 03  இஷ்லாமியர் 01 தமிழர் தெரிவானார்கள். திருகோணமலையில் இருந்து 04 ஆசனங்களில் 02 சிங்களவர் தெரிவாகியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திரு கோணமலையில் சிங்கள பாராளுமன்ற உறுப் பினர்கள் தெரிவாகும் நிலைக்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றமே மூலகாரணம். அதில் இன்று 2025 வரையும் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே சிங்கள பாராளுமன்ற உறுப்பினரகள் தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லை.
இதனை உணர்ந்த கடந்தகால மகிந்தராஷ பக்‌ஷ அரசின் திட்டம்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளான மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்கங்களில் சிங்களவர்களை குடியேற்றும் திட்டமாகும்.
அவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க கூடிய ஒரே இடம் மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரைகளான  மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களாகும்.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் பொல நறுவை, அம்பாறை , மொணறாகலை பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி மீண்டும் அந்த மேய்ச்சல் தரைகளில் பயிர்செய்கையில் ஈடுபடு வதை காணமுடிகிறது.
பேசிப் பார்த்தோம், நீதிமன்றில் வழக்குப் போட்டோம், தொடராக கவன ஈர்ப்பு போராட் டங்களை செய்தோம் எந்த பயனும் இல்லை கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜீத்துக்கு ஆதர வாக வாக்களியுங்கள் என்று தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார் அவருடைய கதையை நம்பி வாக்களித்தோம் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவாகவில்லை இருந்தும் அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் அவர் இதுவரை மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பற்றி வாயே திறக்கவில்லை எனவும் பண்ணையாளர்கள் ஆதங் கப்பட்டனர்.
மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரையாக காணப்படும் இடங்கள் ஏற்கனவேஅடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரளைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9969 ஹெக்டெயர் முன்மொழியப்பட்டுள்ளன.
இருப்பினும் அது வர்த்தமானி அறிவித் தலாக வெளியிடப்படவில்லை. குறித்த எல்லைப் பிரதேசங்களில் அம்பாறை மற்றும் பொலன் னறுவை மாவட்டங்களில் இருந்து அத்துமீறிக் குடியேறுபவர்களது நெருக்கு வாரங்களை தாங் கிக்கொண்டு வாழ்வாதாரத்துக் காக காலம்கடத்தும் நிலையில் மட்டக்களப்பின் பண்ணையாளர்கள் இருப்பதாக கவலை வெளியிடப்படுகிறது.
சுதந்திரம் அரசியல் உரிமை கேட்டு போராடிய ஈழத்தமிழர்கள் இப்போது மட்டக் களப்பில் மேய்ச்சல் தரைக்காகவும், மன்னாரில் காற்றாலை தடுப்புக்காகவும், திருகோண மலை யில் சூரியசக்தி மின்திட்டத்திற்கு எதிராகவும், கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரியும், யாழ்ப்பாணத்தில் செம்மணி படுகொலைக்கு சர்வதே நீதி கோரியும், முல்லைத்தீ வில் மாவீரர் துயிலும் இல்லக்காணியை விடுவிக்க கோரியும்,பல கோணங்களில் போராட்டமே வெவ்வேறு விடயங்களுக்காக நடைபெறும் நிலைமை ஈழத்தமிழர்களுக்கு கடந்த 16 வருடங்க ளாக தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சர்வதேச நீதிவேண்டி ஏறக்குறைய ஐயாயிரம் நாட்களை எட்டும் தொடர் போராட்டம் வடகிழக்கில் எட்டுமாவட்டங்களிலும் போது வான ஒரு போராட்டமாகவும் தொடர்கிறது. முடிவில்லாத, தீர்வு இல்லாத போராட்டங்களே ஈழத்தமிழர்களின் வாழ்வு நிலையாக மாறிவிட்டது என்பது மட்டுமே உண்மை.

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணி!

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

இது பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று இரண்டு நாட்களாக கட்டாரில் நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியக மேலும் அலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் எனவும் புதிய இராணுவ கூட்டு அணி அமைக்கப்படும் எனவும் சவுதி அரேபியாவின் என்பிசி செய்திச் சேவை (nbcnews) தெரிவித்துள்ளது. இக் கலந்துரையாடலில் சவுதி அரேபியா முக்கிய பாங்கு வகிப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான புதிய பிரேரணை: சீனா, பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிரிட்டன்!

பிரிட்டன் தலைமையிலான  இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி அங்கு கருத்துரைத்த இலங்கை  பிரதிநிதி, நாட்டில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தீர்ப்பதற்கு சிறப்புப் பொறிமுறைகள் எவையும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையில் ஏற்கனவே காலநீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்த 57-1 தீர்மானம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60-எல்.1 எனும் முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இலங்கை நேரப்படி பி.ப 1.00 மணிக்கு ஜெனிவாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரிட்டன், வட அயர்லாந்து, கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகளும், பேரவையில் அங்கம்வகிக்கும் இலங்கைக்கு ஆதரவான மற்றும் எதிரான சில நாடுகளின் பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகளும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட வதிவிட அலுவலகப் பிரதிநிதி, இலங்கையில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறப்புப் பொறிமுறையொன்று அவசியமில்லை என்றும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் ஊடாகவே இதற்குத் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்தல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தைத் திருத்தியமைத்தல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இணையனுசரணை நாடுகளிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக தாம் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோராதிருப்பதாக ‘பேரம் பேசியதாகவும்’, இருப்பினும் அதனை பிரிட்டன் மறுத்துவிட்டதாகவும் அறியக்கிடைத்தது. அதேபோன்று நேற்று முன்தினம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரிட்டன் மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு தற்போது சமர்ப்பித்திருக்கும் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதில் தாம் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை வாக்கெடுப்பைக் கோரினாலும், புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான வாக்குகள் தம்வசம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் இக்கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்து: ஜெனிவாவில் போராட்டம்

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதல் வரைவு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தி திங்கட்கிழமை (15) சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்ற நடாத்தப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்பாகக் கூடினர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சர்வதேச நீதிப்பொறிமுறையைக்கோரி பேரணியாகச் சென்றனர்.

முறைமை மாற்றமே தேர்தல் தாமதத்துக்கு காரணம் என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் .

“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.
இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது.
அல்லது பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.