சீனாவில் கன மழை- 17இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தம் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில்,தற்போது பெய்து வரும் கன மழையால் ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவின் காரணமாக நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அரசின் அரசு  செய்திகள் தெரிவிக்கின்றனர்.