கச்சதீவு குறித்த ஆவணங்களை வெளிவிவகார அமைச்சிடம் கோரும் கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, கச்சத்தீவு தீவை இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். அவர் ஏப்ரல் 11 அன்று தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையை (ஆர்ரிஐ) சமர்ப்பித்தார்.

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலின் போது கச்சத்தீவு விவகாரத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி முன்வைத்துள்ள நிலையில், சரியான நேரத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

கிமு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சான்றுகள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் தொடர்பாக அவர் கூறியது உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களை பொதுமக்கள் பாா்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரம் சமீபத்தில் இந்திய அரசியல் மேடைகளில் பிரதமர் நரேந்திர மோடியால் எழுப்பப்பட்டது, காங்கிரஸ் கட்சி கச்சதீவை கையாலாகத்தனமாக இலங்கைக்கு வழங்கியதாக அவா் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையீடு இருப்பதாகவும் மோடி விமர்சித்தார்.

1970 களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் இந்திரா காந்தி, தமிழகத்தின் திமுகவுடன் ஆலோசனை நடத்தி கச்சத்தீவு இலங்கைக்கு கொடுத்துவிட்டாா் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலால் இருந்து சர்ச்சை உருவானது. காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி தொடர்ந்து வலுவான ஆதரவை பெற்றுள்ள தமிழகத்தில் வாக்காளர்களின் ஆதரவைப் பெற பாஜக இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துவதாக இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.