இந்திய தூதுவரை சந்திக்க விரும்பிய மைத்திரி – நிராகரித்த தூதரகம்

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை இந்திய தூதரகம் நிராகரித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிராகரிப்பினை தொடர்ந்து, இந்திய தூதுவரை சந்திப்பதற்கு பிறிதொரு கால அவகாசம் வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்தே மைத்திரி தாய்லாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.