போர் கால ஊடகவியலாளர் சுரேனின் ‘போரின் சாட்சியம்’ நூல் கனடாவில் வெளியீடு

9 8 போர் கால ஊடகவியலாளர் சுரேனின் ‘போரின் சாட்சியம்’ நூல் கனடாவில் வெளியீடுஇறுதிப் போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது.

துசாந்தன் சிவரூபன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் வணக்கப்பாடல் மற்றும் எம்.வி.சன்சி கடல் வணக்கப்பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. இன அழிப்பு செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. சுடரை கந்தையா பாலசுப்பிரமணியம் ஏற்றியையதையடுத்து ஆரம்ப உரையை ராதா நிகழ்த்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவுக் கவிதையை அட்சரா வரதராசா நிகழ்த்தினார். நூலை இறுதிப் போரின்போது மூன்று பிள்ளைகளையும் கணவரையும் பறிகொடுத்த சாந்தி வெளியிட்டு வைக்க இளைய தலைமுறையின் சார்பில் போர் காலத்தில் குழந்தையாக வாழ்ந்த அபி சுவேந்திரகுமார் பெற்றுக்கொண்டதுடன் சிறப்புரையையும் ஆற்றியிருந்தார்.

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதியை கனடாவின் முடியரசு – பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியிடம் நூல் ஆசிரியர் கடந்தவாரம் கையளித்திருந்தார்.

சுரேன் கார்த்திகேசு ஈழநாதம் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகவும் பக்கவடி வமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் வலைஞர்மடத்துக்கும் இரட்டைவாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பணி நிமித்தம் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தார். போரின் பின்னர் தாய்லாந்தி லிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற சன் சீ கப்பல் மூலம் அகதியாக கனடாவைச் சென்ற டைந்திருந்தார். கடல் பயணத்தின்போது, ஏற்கனவே அடைந்திருந்த காயத்தின் பாதிப்புகளாலும் கப்பலில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் உயிராபத்தையும் எதிர்கொண் டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.