யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் பாதணிகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள அந்திரான் என்னும் கிராமத்தில் கொழும்பில் இருந்து தருவிக்கப்படும் பொருட்களை கொண்டு அழகான பாதணிகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான அழகிய பாதணிகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. பெண் தலமைத்துவத்தைக் கொண்ட ஐந்து பெண்கள் அங்கு பணியாற்றுவதுடன், அந்த கிராமத்து மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. பாதணிகளில் போடப்படும் அழகிய வேலைப்பாடுகள், அவற்றை அச்சுப் பதிப்பது, பொதி செய்வது என எல்லா பணிகளும் பெண்களால் செய்யப்படுகின்றன.

அந்திரான் தோல்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பாதணிகளை வாங்குவதன் மூலம் யாழ் மக்களினதும், அந்த பிரதேசத்தினதும் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் உதவ வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.