காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும்: ஐநா  பொதுச் செயலாளர் வேண்டுகோள்

ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள்

இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று  இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்நிலையில்,  “காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர்  குத்ரேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பும், பிரிவினையும், மோதல்களும் மலிந்து கிடக்கிறது. அதனால், இப்போது அமைதி, நம்பிக்கை, சகிப்புதன்மை நிறைந்த புதிய காலத்தை வரவேற்க வேண்டியுள்ளது. சர்வதேச அஹிம்சை தினமான இன்று காந்தியின் அமைதி வழியில் நடந்து எல்லோருக்கும் எதிர்காலத்தை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021