பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்- 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 310 பேர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்   வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் 14 நகரங்களில் மேலும் கன  மழை பெய்யும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

16 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு நகரமான கராச்சி, மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இந்த வெள்ள நீர் ஏற்பட்டுள்ளது என்றும் 5600 வீடுகள் தேமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது.