கூலிப்படைகளை அமைத்து தொழிலாளா்களை தாக்கும் கம்பனிகள் – மனோ

தோட்ட கம்பனிகள் கூலிப்படைகளை அமைத்து தொழிலாளர்களை தாக்குவதாக பாராளுமன்றில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்க பட்டுள்ளன.

இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்று முதல் நாள், கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும்படி கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு பணித்தேன்.

தாக்குதல் நடத்தியவர்களை இரு நாட்கள் தேடிய பொலிஸார் தற்போது அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்” என குறிப்பிட்டார்.