பிரதமர் மோடி தமிழகம் வருகை-பலூன்கள் பறக்க முதல்முறையாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் திகதி மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைக்கிறாா். அன்று தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோடி, மறு நாள் ஜூலை 29-ம் திகதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகின்றார்.

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது.

பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.