யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனாவுக்குப் பலி

covid deaths.800 யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனாவுக்குப் பலியாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்வடைந்துள்ளது.ilakku-weekly-epaper-141-august-01-2021