திருகோணமலை-எரிபொருள் தட்டுப்பாட்டால் மீனவர்கள் கடும் பாதிப்பு

மீனவர்கள் கடும் பாதிப்பு

மீனவர்கள் கடும் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக ஆழ் கடல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை கரையோர மீனவர்கள் மண்ணெண்ணெய் மூலமாக தங்களது இயந்திர படகை பயன்படுத்தி வரும் நிலையில், மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணெயை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை. சில வேளை மண்ணெண்ணெய் கிடைக்காது விட்டால் கடலுக்கு செல்ல முடியாது. இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.  இரவு நேரங்களில் கண்விழித்து கடல் தொழிலில் ஈடுபட்டு, காலை முழுவதும்  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருந்து  எரிபொருளை பெற வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இயந்திரம் மூலமாக மீனவப் படகில் ஈடுபடுவோருக்கு மண்ணெண்ணெயை இலகுவாக பெறுவதற்கு உரிய அதிகாரிகள் வழி செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.