மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் நாடு கடத்தல் 

சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர்

சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர்: மலேசியாவின் Sarawak பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த 7 இந்தோனேசியர்களை நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  Op Benteng எனும் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா- இந்தோனேசியா எல்லைக்கு மிக அருகாமையில் இருக்கும் Kampung Stass எனும் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த அவர்களை கைது செய்ததாக மலேசிய படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து வேலைத் தேடி மலேசியாவுக்கு வந்த அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து அனைவரும் நாடுகடத்தப்படுகின்றனர்.