கொரோனா தொற்று: அரசியல் கைதிகளுக்கு விரைந்து உதவ ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு கோரிக்கை

Tamil Political Prisoners கொரோனா தொற்று: அரசியல் கைதிகளுக்கு விரைந்து உதவ 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக் காரணமாக பல்வேறு பாதிப்புக்களை உடல் ரீதியாக சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு , குறித்த கைதி களுக்கான சிகிச்சைகளை உரிய முறையில் வழங்க  விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,

”கோவிட் தொற்று நான்காவது சுற்று சிறைச் சாலைக்குள் பரவத் தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனா தொற்றுக்கு ஆளாகி வெலிக்கடை சிறை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அதே போன்று கொழும்பு மகசின் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

PHOTO 2021 07 14 22 37 13 கொரோனா தொற்று: அரசியல் கைதிகளுக்கு விரைந்து உதவ 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு கோரிக்கை

PHOTO 2021 07 14 22 37 14 கொரோனா தொற்று: அரசியல் கைதிகளுக்கு விரைந்து உதவ 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு கோரிக்கைதமிழ் அரசியல் கைதிகளை பொறுத்த மட்டில் இவர்கள் இரண்டாவது தடவையாக இந்தத் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் மிக நீண்ட காலமாக சிறைத் தடுப்பில் வைக்கப் பட்டுள்ளதால் பல்வேறு வகையிலான நோய் நொடிகளால் பீடிக்கப் பட்டுள்ளார்கள்.

சிறைச் சாலைகளில் கைதிகளை பார்வை யிடுவதற்கான சந்தர்ப்பமும் நிறுத்தப் பட்டுள்ளதன் காரணமாக அவர்களுக்கு போசாக்கான ஊட்டச் சத்து மிக்க உணவுகள் கிடைப் பதற்கான வாய்ப்புக்கள் அற்று அவர்கள் உடல் உள ரீதியில் அதிக பலவீனம் அடைந்தவர் களாக இருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துள்ள இவர்களை மிக இலகுவாக தொற்று நோய்கள் பற்றிக் கொள்கின்றன. இந்த நிலை தொடருமானால் உயிராபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே, தற்போது நாட்டுக்கு கணிசமான அளவு தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். அந்த வகையில், நெடுநாள் நோய் நொடிகளோடு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆபத்தில் இருந்து மீட்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கொழும்பு – புதிய மகசின் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நோய் வாய்ப்படுகின்ற நிலையில், அவர்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மகசின் சிறைச் சாலை மருத்துவர்களால் மேலதிக சிகிச்சைக்கென பரிந்துரைக்கப் படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சையினை பெற்றுக் கொடுப்பதற்கு சிறைத்துறை நிர்வாகம் பொருத்தமற்ற காரணங்களை கூறி வெறுமனே காலத்தை கடத்தி வருவதாக கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நோய்த் தாக்கம் அதிகரித்து மிகுந்த வேதனைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்ட காலங்களின் போது இவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களின் பிந்திய விளைவுகள் தற்போது வெளிப்படத் தொடங்கி யுள்ளதாலும் போர்க் காலத்தின் போதான விழுப்புண் தாக்கங்களினாலும் அரசியல் கைதிகள் பல்வேறு வலி வியாதிகளுக்கு ஆளாகியுள்ளனர். அதாவது கட்புலன் செவிப்புலன் பாதிப்பு, சுவாசக் கோளாறு , ஒருதலைக்குத்து, சிறுநீரக பாதிப்பு இருதய நோய் , குடல் அலற்சி , நீரிழிவு, முள்ளந் தண்டு பாதிப்பு ,முழங்கால் மூட்டு தேய்வு , ஆஸ்மா, மன அழுத்தம், தோல் நோய்கள் என்பவற்றால் அன்றாட பொழுதுகளை துன்பங்களோடு கழித்து வருகிறார்கள்.

தமிழ் அரசில் கைதிகளை பொறுத்த மட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான  நீண்ட கால சிறை வைப்பு, துரித விசாரணையற்ற விளக்க மறியல், கடுமையான தண்டனை தீர்ப்புக்கள் என அனுபவித்து வரும் கஸ்டங்களுக்கு மேலதிகமாக இவ்வாறு மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் துயரப்படுவது எத்தனை கொடியது? இதனை மோசமான உரிமைய மீறல் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

அரசாங்கமானது , தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்து வருகின்ற நிலையில், இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காணாமல் இருப்பது நம்பிக்கை யீனத்தை ஏற்படுத்துகிறது.

சிறைத் துறையும் மருத்துவத் துறையும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மாற்றான் தாய் மனப் பாங்குடன் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும். அரசியல் கைதிகளுக்கு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதில் ஏதேனும் நடை முறை இடையூறுகள் காணப்படு மாயின், சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிறைச் சாலைக்கு அவர்களை மாற்றி யாழ். போதனா வைத்திய சாலையில் தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ் அரசியல் கைதிகள் எதிர் நோக்கும் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் நாடாளு மன்ற பிரதிநிதிகள் அரசுடன் பேசித் தீர்வுகளை கண்டடைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்” என கோரிக்கை விடுத்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கொரோனா தொற்று: அரசியல் கைதிகளுக்கு விரைந்து உதவ 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு கோரிக்கை