தாய்வனை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை

தாய்வனை சுற்றி இரண்டாவது நாளாக சீனா இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இராணுவம் சனிக்கிழமையன்று தாய்வனைச் சுற்றிப் பயிற்சிகளை அறிவித்தது. இதனால் இரு நாட்டு எல்லையுல் பதற்றம் நீடித்து வருகின்றது.

சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தாய்வான் அருகே சீனாவின் 71 பி.எல்.ஏ விமானங்களையும் ஒன்பது போர்க்கப்பல்களையும் கண்டறிந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக தாய்வானை சுற்றி இராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.