சீனாவின் பெருவெள்ளம் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவின் Shanxi மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, 120,000 மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களிலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற்பட்டுள்ளனர்.
அத்துடன் 17 இலட்சம் மக்கள் வெள்ளம் மற்றும் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2 இலட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் இதில் பாதிக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரம் கட்டிடங்கள் சேதமடைந்திருக்கின்றன.