காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி
காந்தள் கிழங்குகளே
மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே
மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே
நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது
கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.
ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும்
ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள்.
விழித்த மனதில்...
‘சமர்க்களம் சென்றார் அவர்சாவதற்கோ அஞ்சியதில்லை’ -உஷா சிறீஸ்கந்தராஜா
"இன்று மாவீரரைப் போற்றும் முகமாக 2006, 2010 ம் ஆண்டுகளில் நான் இயற்றிய இரண்டு கவிதைகளை வெளியிட விரும்புகின்றேன். அதற்குப் பிறகு எவ்வளவோ விடயங்கள் நடந்தேறி விட்டன. எமது மக்களுக்கான நீதியை அடைகின்ற...
மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்
மாவீரம்தான் எங்கள்
வல்லமையின் நாதம்
*********
தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும்
திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும்
அரும்பும் எரிகொண்டு நின்று
சிலிர்க்கும்
விரும்பும் விடுதலைக்காய்
வேகம் தரிக்கும்
கார்த்திகைப்பொழுதினில்
கருக்கொள்ளும் வீரம்
கல்லறை இல்லங்கள்
காவியப்பண் பாடும்
தாயகம் வேண்டும்உயிர்
உருக்கொண்டு சீறும்
தமிழீழம் உயிர்பெறவே
ஊழிக்கூத்தாடும்-
மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும்
மண்ணிலே தமிழ்மானம்
எழுந்து வானளக்கும்-அந்த
இசைவந்து எம்முயிரை
ஏதேதோ செய்யும்.
கசிகின்ற விழியோரம்
பெருவுறுதி...
அதி மானுடர்கள்
அதி மானுடர்கள் - சபரி
1987 யூலை 05ஆம் நாள் இரவு.
யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான...
இராயப்பு ஜோசப் ஆண்டகை: நம்பிக்கையற்று வாழ்க்கையின் விளிம்பில் நின்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் – பி.மாணிக்கவாசகம்
முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நிரந்தர இளைப்பாற்றல் தமிழ்த்தரப்பினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயராக இருந்த போதிலும், பொது வெளியில் பல்லின மதங்களைச்...
கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்
கார்த்திகைக் காந்தள்
உப்புக் கண்ணீர்
ஈரத்தில்..
குருதிக் காயாத
கறையோடு
முள்ளிவாய்க்காலில்
மூடப்பட்ட- எம்
உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..
எழும்புகிறது
எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!
இன அழிப்பில்
இறந்த காந்தள்
மாவீரர் நாளில்
முட்டி முளைத்து
நிமிர்கிறது..
விடுதலை திறப்பின்
அடையாளமாய்!
கார்த்திகைப்
பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்
முன்னிலும்
பெரிதாய் சுடர் விடுகிறது
தமிழீழம் நோக்கிய
காந்தள்!
உலகில்
வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…
தன் மண்ணை வணங்க
தலை நிமிரும்
காந்தள்...
கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!
கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!
உலகத்தமிழரை உயரவைத்த ஓர்
உன்னத சக்தி இப்பூமியில் உதித்த
திலகத் திருநாள் இன்றைய பெருநாள்!
நிலவின் குளிரும் கதிரின் ஒளியும்
தமிழர் உரிமைக் குரலின் ஒலியும்
ஒருமைப் பொருளாய் உயிரினில் ஏந்தி
உதயமாகிய ஒப்பற்ற அருள்நாள்!
கார்த்திகைச் செல்வன்...
‘கருகிய நினைவுகளை மறைத்து வெண்ணிறக் கட்டடமாய் எழுந்து நிற்கின்றது யாழ் நுாலகம்’ – ரகுராம்
யாழ். நூலகக் கட்டடம் அரசியலும் ஆதாயமும் ஒருங்கு சேர்ந்திட வெண்ணிறக் கட்டடமாய், கருகிய நினைவுகளை மறைத்து எழுந்து நிற்கின்றது என யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் சிவசுப்ரமணியம் ரகுராம் தெரிவித்துள்ளார்.
யாழ். நுாலக எரிப்பு தொடர்பில்,...
சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்
நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்:
1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப்...
படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – பகுதி – 2 – மட்டு.திவா
இலுப்படிச்சேனை சந்தியில் வாங்கிக் கொண்டு வந்த பயத்தம் உருண்டைகளைச் சாப்பிட்டு, நீரையும் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அடிவாரத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
இவ்வளவு நாளும்...