வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் சடலங்களாக மீட்பு

வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள்வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் நேற்று கரையொதுங்கியுள்ளன.

வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே இருவரது சடலங்களும் நேற்ற நண்பகலும் பிற்பகலும் கரையொதுங்கியுள்ளன.

மீனவர்கள் காணாமல் போன அன்று அவர்கள் கொண்டு சென்ற மீன்பிடி வலைகள் அறுந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன.

வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக  தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் இருவரின் சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.

Tamil News