அரசுக்கு எதிராக அனைத்து GMOA பிரிவுகளும் இன்று ஆர்ப்பாட்டம்

அரசுக்கு எதிராக அனைத்து GMOA பிரிவுகளும் இணைந்து இன்று எதிர்ப்புப் பிரசாரத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக வைத்தியர்கள் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடியை நிவர்த்தி செய்வதுடன் உடனடித் தீர்வுகளை வழங்குமாறு நாட்டின் தலைவர்களை வலியுறுத்தும் நோக்கில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது முன்னெடுக்கப்படவுள்ளதாக GMOA குழுவின் உறுப்பினரான வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் உட்பட எந்தவொரு தனி நபரும் போராட்டங்களில் இணையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil News