கோட்டா அரசுக்கு உச்சமடையும் நெருக்கடி – ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்க ஆலோசனை?

ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்க ஆலோசனை

ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்க ஆலோசனை

கோட்டா அரசுக்கு எதிராக ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் உச்சமடைந்து வரும் நிலையில் நாட்டை ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் அதனை சரி செய்ய முடியாத நிலையில் நாட்டை முடக்குவதன் மூலம் அதனை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

நாடு முடக்கப்படுவதாக இருந்தால் இன்று இரவு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கோட்டா அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என அரச தரப்பினர் எதிர்பார்த்தே இவ்வாறு நாட்டை முடக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.