இலங்கை கடல் எல்லையில் X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 473 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 417 கடலாமைகள், 48 டொல்பின்கள் மற்றும் 8 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வௌிக் கொணரப்பட்டுள்ளது.
கடல் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பரிசோதிக்கப்பட்ட போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஒகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது.