சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள் வெட்டு

யாழ்.வல்வெட்டித்துறை  ஊாக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாரிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.

இதனிடையே சிறீலங்கா அரசினதும் அதன் படைகளினதும் ஆதரவுடன் வடபகுதியில் மட்டும் இயங்கிவரும் ஆவா குழு என்ற ஆயுதக்குழு வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும் சிறீலங்கா படையினரின் பிரசன்னத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமாக இயங்கி வருகின்றது. எனவே சிறீலங்கா படையினர் மீதான இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.