13’ஐ கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க விடமாட்டாராம் தேரர் கொந்தழிப்பு

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்க போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று கூறுகிறார்கள். இலங்கை எங்களது என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

நாம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகப்பெரிய தலையிடியாக அமைந்தது. இனவாத,மதவாத சட்டங்களை கொண்டு வந்தனர். பெரஹெரவில் யானை பிரச்சினைகளை ஏற்படுத்தினர். சோஃபா ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசியலமைப்பொன்றை வைத்துள்ளனர்.

தற்போது எங்களை பாதுகாக்க பார்க்கின்றனர். எங்களை எப்போதோ பௌத்தர்கள் பாதுகாத்து விட்டனர். எனினும் நாங்கள் இவ்வாறுதான் என அடுத்ததாக வர முயற்சி செய்யும் நபர்கள் எமது முன்னிலையில் உறுதிமொழி ஒன்றை வழங்க வேண்டும்.

கோத்தாபய எமது நண்பர். அவர் நாட்டை பாதுகாப்பதாக தெளிவாக கூற வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை உடனடியாக வௌியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.