இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா சிறிலங்காவின் இராணுவத்தளபதியா?

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்ற குழப்பத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இருந்திருந்தார்.

எனினும் கோத்தபாயவுடனான சந்திப்பின் பின்னராக புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, அவர் ஓய்வுபெறும் வயதை எட்டியிருந்த போதும், சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக- இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே அவர்களாவர்.கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர்  ஜெனரல் சவேந்திர சில்வாவை,  இராணுவத் தளபதியாக நியமிக்க கோத்தபாய சிபார்சு செய்துள்ளதனையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.