ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்தவர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை – சி.சிறீதரன் அஞ்சலி

ஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை 80 வயதில் இன்று காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்

இந்நிலையில், ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,  தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன்  அவர் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர் என்று தெரிவித்தார்.

image1 1 ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்தவர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை - சி.சிறீதரன் அஞ்சலி

மேலும் அவருடைய இறுதி திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடிகளோடு அவருடைய உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன். எனவே ஆயரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்கமுடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.