சிறீலங்கா சுதந்திரக்கட்சி வசமிருந்த மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை த.தே.கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தெரிவு சபையின் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் தவிசாளராக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் அவர்கள் இரண்டு முறைகள் இடம்பெற்ற சபையின் வரவுசெலவுத்திட்ட தொற்கடிக்கப்பட்டமையினால், தவிசாளர் வெற்றிடம் காணப்பட்ட செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று இடம்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னத்துரை சரவானந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.