ஜோ பைடன் உயிருக்கு ஆபத்தா? பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலரால் தாக்கப்படலாம் என தகவல் பரவியுள்ள நிலையில், அவருடைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பதவியேற்பு விழா நடக்கும் நாளில் அல்லது அதற்கு முன், ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என, அமெரிக்காவின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது. அதனால், வழக்கத்தைவிட அதிக அளவு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முன்னதாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள்  ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.