‘அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு’ – வடக்கில் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில்,  நல்லூர் நல்லை ஆதினத்தின் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 'அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு' - வடக்கில் போராட்டம்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க,  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடியவிட வேண்டாம்”. போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 'அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு' - வடக்கில் போராட்டம்

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

protest mullai 'அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு' - வடக்கில் போராட்டம்

அதே போல் கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.