மலேசியா – கொரோனா சிவப்பு மண்டலத்தில் அகதி முகாம்

மலேசியாவின் Labuan பிரதேச சுகாதார அதிகாரிகள் சுமார் 3,200 அகதிகள் வாழும் Kiamsam-ல் உள்ள பகுதியை கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து, அகதி வாழும் பகுதியில் சாலைத் தடுப்பை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதிக்குள் உள்ளே வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த சாலைத் தடுப்பு நடவடிக்கை பத்து நாட்களுக்கு தொடரும் என மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.