பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூடடில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு பெய்ரூட் துறைமுகப் பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. குண்டு வெடிப்பினால் கரும்புகை வெளிவந்துகொண்டிருந்தது.

குண்டு வெடிப்பு காரணமாக அப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுகின்றனர். குண்டு வெடிப்பிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.