இயல்பான எதிர்காலம் கண்ணிற்குத் தெரியவில்லை” – உலக சுகாதார அமைப்பின் தலைவர்

உலகில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலம் நிச்சயமற்று உள்ளதாகவும், இயல்பான எதிர்காலம் கண்ணிற்குத் தெரியவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,32,29,659 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,74,981 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை குணமடைந்தோர் எண்ணிக்கை 76,91,451ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கருத்துத் தெரவிக்கையில், “வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மிக மோசமாகி வருகிறது. எதிர்காலம் நிச்சயமற்றுக் காணப்படுகின்றது. இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. இயல்பான எதிர்காலம் கண்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலையில், அடிப்படைகளைச் சரியாக கடைப்பிடிக்கவில்லையெனில், இந்த கொரோனா பெருந்தொற்று ஒரே பாதையில் தான் பயணிக்கும், அது மோசமான பாதையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.