சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், வடக்கு நைஜரில் தங்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையிலான முக்கிய எல்லைக் கடப்புப் பகுதியான அசாமாகாவிலிருந்து (Assamaka) மேற்கே 80 கிலோமீட்டருக்கும் (50 மைல்) அதிகமான தொலைவில் அந்தக் குழுவினர் சிக்கிக்கொண்டனர்; இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-அதா (பக்ரீத்) கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் தண்ணீர் தீர்ந்துபோனது.
“தீவிரமான வெப்பநிலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் இல்லாத சூழல் காரணமாக உயிர் வாழ்வது மிகவும் கடினமாக உள்ள பகுதியின் மையப்பகுதியில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்,” என்று அகடேஸ் (Agadez) ஆளுநர் கூறினார்.
இதில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அவர்கள் பாலைவனத்தைக் கடந்து அசாமாகாவை அடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களது சடலங்கள் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.
நன்றி: பிபிசி தமிழ்



