இந்தியா இலங்கை ஒப்பந்தம் 1987அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இடையே கையெழுத்தான ஒப்பந்தம், 13ஆவது திருத்தச் சட்டத்திருத்தம் மூலம் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்காகவும் கொண்டுவரப்பட்டது.
அதனால் அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் 1988,ல், ஒரு தடவையும், 2006, ல் இணைந்த வடகிழக்கு மாகாணங்கள் சட்ட ரீதியாக மகிந்தராஜபக்ஷ அரசு பிரித்த பின்னர் கிழக்கு மாகாணசபை தேர்தல் 2008, 2012,ல் இரண்டு தேர்தல்களும், 2013, ல் வடமாகாணசபை தேர்தல் ஒருதடவையும் மட்டும் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் 2017, ல் நல்லாட்சி அரசில் இணக்க அரசியல் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரு டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டாக இணைந்து ஆட்சியமைத்த காலத்தில் மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தப்பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தமையால் கையில் கிடைத்த மாகாணசபை சிறிய அதிகாரங்களும் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் ஆளுநர்களின் அதிகாரத்தில் முழுமையாக சென்றன.
2009, மே,18, ல் முள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் மௌனித்த பின்னர் வடகிழக்கின் தமிழர்களின் தலைமையாக 2010, பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடகிழக்கு தமிழர்கள் அங்கீகாரம் தந்திருந்தனர்.
அந்த 2010, தொடக்கம் 2026, வரை 17, வருடங்களாக இந்திய பிரதமர்கள், இந்திய இராஜ தந்திரிகளுடன் தமிழ் தேசிய தலைமைகள் பல்வேறு பேச்சுவார்தைகளில் ஈடு பட்டனர் ஆனால் இதுவரை இந்திய அரசால் இலங்கை ஆட்சியாளர்களை வலியுறுத்தி ஒரு அரசியல் தீர்வை வழங்க முடியவில்லை. மாகாணசபைத் தேர்தலை கூட நடத்த முடியவில்லை. கூடிக்கலைந்த பேச்சுக்களாவே கடந் தன.
கடந்த 2010, தொடக்கம் 2026, வரை 17, வருடங்களாக இந்தியபிரதமர், இந்திய அமைச்சர்கள், இந்திய தூதுவர்கள், இந்திய இராஜதந்திரிகளுடன் தமிழ்தேசிய தலைமைகள் பேசியது செய்திகளாகவும், நிழல் படங்களாகவும் மட்டுமே வெளிவந்தன. பலன் எதுவும் இல்லை. அந்த முக்கிய சந் திப்புகள் சில.
2010 யூன்09 ல் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை தொடர்பான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டுப் பிரகடன வெளியீட்டின் போது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஷபக்ஜவை வலியுறுத்தினார்.
2011 யூன் 16,17 ல் இருதரப்பு உறவுகள், தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கம் குறித்து விவா திக்க இந்தியாவின் உயர்மட்டக் குழுவினர் சிவசங்கர் மேனன், நிருபமா ராவ், பிரதீப் குமார் ஆகியோர் இலங்கை வந்தசமயம் தமிழ்தேசிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மாகாணசபை, அதிகாரப்பகிர்வு தொடர்பாக தாம் இலங்கை அரசிடம் தெளிவாக கூறியதாக கூறினர் . ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
2012, மார்ச்,19, ல் இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியவர் அசோக் கே. காந்தாவுடன் தமிழ் தரப்பு சந்தித்து மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வலியுறுத்தியது.
2012 அக்டோபர் 10 முதல் 13 வரை, இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 07 பேர் கொண்ட குழு இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று புது டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டனர். . இக்குழுவினர் இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து இலங்கைப் தமிழர் அரசியல் தீர்வு குறித்துப் பேசினர். இதில் இரா சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன்,பொ. செல் வராசா, அப்பாபிள்ளை விநாயகமூர்தி, செல்வம் அடைக் கலநாதன், மற்றும் எம். ஏ. சுமந்திரன். ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரப்பகிர்வு தொடர்பாக வலியுறுத்தினர்.
2013,நவம்பர், கொழும்பில் நடைபெற்ற பொது நலவாய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகை தந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு சமஷ்டித்தீர்வை வலியுறுத்தல்.
2014 மே 28 ல். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் சந்தித்தார். இதன்போது ஈழத்தமிழர் அரசியல் தீர்வு தொடர்பாக 13, வது திருத்தசட்டத்தில் 13+, உச்ச அதிகாரம் வழங்குவதாக மகிந்த கூறினார். எதுவுமே நடக்கவில்லை.
2015 மார்ச் 13 முதல் 15 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு, அனுராதபுரம், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். இதன்போது யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்தித்து அதிகாரப்பகிர்வு வலியுறுத்தினர்.
2015 ஆகஸ்ட் 17 தொடக்கம் 2019 நவம்பர் 19 வரை நல்லாட்சி அரசில் இணைக்க அரசியல் காலம், தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி தலைவர் பதவியுடன் ஆட்சியின் பங்காளர்களான காலம்.
2016 பெப்ரவரி 05 , 06 ஆகிய திகதிகளில் இந்தியா வின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அப்போது எதிர்கட்சி தலைவர் இரா சம்மந்தன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்தவர்களுடன் சந்திப்பு வழமை யான அதிகாரபகிர்வு, பேச்சு.
2017,மே,11,12, ல் சர்வதேச வெசாக் தின கொண் டாட்டங்களில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் சந்தித்து பேசினர், இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவுடன் தாம் 13, வது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக மோடி தெரிவித்தார்.
2017 செப்டம்பர் 22 மாகாணசபை தேர்தல் திருத்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம், விகிதாசார தேர்தல் முறை இரத்து, புதிய எல்லை நிர்ணயம், கலப்பு முறை தேர்தல் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு.
2018 ஜனவரி 14-17, வரை சட்ட, நீதி மற்றும் மின் னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இலங்கை வருகை எதிர்கட்சி தலைவர் இரா சம்மந்தன் தலைமையில் தமிழர் தரப்பு சந்திப்பு.
2019 யூன் 09ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். வழமை போன்று ஜனாதிபதி மகிந்தவுடன் ஈழத்தமிழர் விடயம் பேசப்பட்டதாக செய்தியில் கூறப்பட்டது.
2019 ஏப்ரல்,21 ல் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கைக் குப் பயணம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இவர் ஆவார். எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்திப்பு. இலங்கைக்குத் தனது ஆதரவையும் நாட்டு மக்களுடன் தோள்நிற்பதையும் வெளிப்படுத்தினார்.
2020 பெப்ரவரி பிரதமராக பதவி ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தியபயணம் மேற்கொண்டார். வழமையாக ஈழத்தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்பட்டது. 2022 மார்ச் 28ல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டார். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து பொருளாதார உதவி கள் குறித்தும், மாகாணசபை தேர்தல் உடனே நடத்துமாறும் கூறினர்.
2023 ஜனவரி19, 20,ல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்தேசிய கட்சிகளுடைய தலைவர்கள் சந்தித்து மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வழமையான வாய்ப்பாட்டை கூறினர்.
2024 ஜனவரி 22ல் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலை வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்து பேசினர். இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசி யல் தீர்வு காண இந்தியா தனது அழுத்தங்களைப் பிரயோகி க்க வேண்டும் எனவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்துப் பேசப்பட்டது.
அதற்கு அவர் கூறியபதில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையின்றிப் பிளவுபட்டு இருப்பது குறித்து இந்தியத் தரப்பு தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறது ஒற்றுமையாக செயல்படுங்கள் என ஆலோசனை கூறினார்.
2025 ஏப்ரல் 05ல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்தேசிய கட்சிகள் இலங்கையில் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி அநுராவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
2026 ஏப்ரல்19 ல் இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணனுடன் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த போதும் நிறுத்தப்பட்ட மாகாணசபை தேர்தலை நடத்து வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
2026 ஆகஸ்ட் 05,ல் இந்திய வெளியுறவு செயலாளர் விக்கிரம் மிஷ்ரி அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ. சாணக்கியன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உயிப்பினர் கோடிஸ்வரன் சந்தித்து அதிகாரப்பகிர்வு, மாகாணசபை தேர்தல் சம்மந்தமாக கலந்துரையாடினர்.
2026,ஆகஷ்ட், 20, ல்,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும், யாழ்மாவ ட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ ஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இதில் குறிப்பிட்ட பொதுவான சந்திப்புக்களுக்கு அப்பால் தனித்தனியாகவும் தமிழ்தேசிய கட்சி பிரமுகர்கள் இந்திய அரசின் இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர், அனைத்துமே விடை தெரியாத கேள் விகளுடனே இன்றுவரை தொடர்கிறது.
ஈழத்தமிழர்களின் இணைந்த வடகிழக்கில் உரிமை, சுதந்திரம், சமஷ்டி அடிப்படையிலானதீர்வு, எது வுமே பூச்சியமான வடநிலையில் தற்போது தனிஈழம் கேட்டு போராடிய தமிழர்கள் மாகாணசபை தேர்தலை கேட்டு போராடு ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே வர லாற்று உண்மை.



