திருகோணமலையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

திருகோணமலையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் (29) இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர், கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News