வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் மேலும் 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வெலிகந்தை முகாமுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினமும் பெண் னைதிகள் ஆறு பேர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிறைச்சாலையிலிருந்து தீவிர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.