வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி பொலிசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைந்து குடியரசு தின அணிவகுப்பு நிறைவுறும் செங்கோட்டையை அடைந்துள்ளது.
#WATCH Police use tear gas on farmers who have arrived at Delhi's Sanjay Gandhi Transport Nagar from Singhu border#Delhi pic.twitter.com/fPriKAGvf9
— ANI (@ANI) January 26, 2021
வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11-சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், விவசாயிகள் அறிவித்ததன் படி குடியரசு தினமான இன்றைய நாளில் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியில் தற்போது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தடியடி நடத்தியுள்ளனர்.