இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க இந்தியா உதவும் – கோபால் பாக்லே

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது  உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றில் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 72ஆவது குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியிட்டுள்ள  அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையும் இந்தியாவும் இணைந்து பணியாற்றி சமகால பொருளாதார மற்றும் ஏனைய சவால்களை வெற்றிகொள்ள முடியும்.

கோவிட் 19 இன் சவால்கள் இருந்தபோதிலும், செப்டம்பர் 26ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு உச்சிமாநாடு, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையே ஏராளமான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றன.

அத்தோடு, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தனி சந்திப்புகளை மேற்கொண்டார்.

இவை அனைத்தும்  2021 ஆம் ஆண்டில் கோவிட் 19 இன் சவால்களிற்கு மத்தியிலும் இருதரப்பினாலும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியை பேணியுள்ளோம் என்பதைக் காட்டுகின்றன. இணையவழி பேச்சுவார்த்தைகள் இரு தரப்பு உறவுகளை மேலும்  முன்னெடுத்துள்ளது.

DSC 0726 இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க இந்தியா உதவும் - கோபால் பாக்லே

கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம்  நிகழ்வுகள் நடைபெற்றன

DSC 0710 இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க இந்தியா உதவும் - கோபால் பாக்லே
முன்னதாக துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.