யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்துார பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முதல்வர் து.ஈசன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் திகதி திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மொழி புறக்கணிக்ப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு இங்கிருக்கும் வர்த்தக நிலையங்கள் சகல நிறுவனங்களிலும் எங்களுடைய தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பேருந்து நிலையத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது, மன வருந்தத்தக்கது.
மேலும் பெயர் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காத நிலையில், இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.