மைக் பொம்பியோவிற்கு வி.உருத்திரகுமாரன் எழுதிய கடிதம்

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கம் இலங்கையை சீனத்தின் குறுநில அரசாக்கி விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020இற்கான ஆண்டறிக்கையில் சொல்லியிருப்பது போல, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலை, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு இத்துறைமுகத்தளத்தை சீனா இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.