முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க சஜித்துடன் இணைந்தாா்

2222 முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க சஜித்துடன் இணைந்தாா்முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அரச கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அந்த அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க, இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.