முன்னாள் இந்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மரணம் – வே.இராதாகிருஸ்ணன் இரங்கல்

முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல்  அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சுஷ்மாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி 07.08 காலை உயிரிழந்தார்.

இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியினை மலையக மக்கள் முன்னணி  தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சுஷ்மா சுவராஜ் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவின் அனுபவம் மிக்க அரசியல்வாதியும் சிறந்த பெண் ஆளுமையைக் கொண்டவரும் பெண்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், இலங்கையின் ஒரு சிறந்த அரசியல் நண்பனுமாக இருந்த முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது செய்தியில், இலங்கையைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவும் சாதுர்ஜமாகவும், நுணுக்கமாகவும் செயற்பட்டு அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர். பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.