ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமிழர் புறக்கணிக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் வாக்குரிமையை தான் பறிக்கவில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.

முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார் எனவும் தெரிவித்தார் தற்போதைய  அரசாங்கம் நான்கரை வருடங்களாக கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.