காஸ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கை – சிறீலங்கா ஆதரவு

இந்திய கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

யூனியன் பிரதேசமாக பிரிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் மாற இருக்கின்றது. இது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தான் லடாக் சென்றிருப்பதாகவும், அனைவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம் அது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

70 சதவீதம் பௌத்த மத மக்களை கொண்ட லடாக் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக ஆகின்றது.